இலங்கை கடற்படையின் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் கடற்படை நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் நலவாழ்வுச் செயல்பாடுகள், அத்துடன் கடற்படை வீரர்களின் சேவைகள் மற்றும் குடியிருப்பு வசதிகளையும் ஆய்வு செய்தார்.