போபுருஎல்ல நீர்த்தேக்கத்தின் செயலற்ற மதகின் செயல்பாட்டை மீட்டெடுக்க கடற்படை சுழியோடிகளின் உதவி
நுவரெலியாவில் உள்ள போபுருஎல்ல நீர்த்தேக்கத்தின் செயலற்ற மதகை செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்க கடற்படை 2026 ஜனவரி 19 ஆம் திகதி சுழியோடியின் உதவியை வழங்கியது.
போபுருஎல்ல நீர்த்தேக்கத்தில் உள்ள மதகை ஆய்வு செய்து மீட்டெடுப்பதற்கு கடற்படை சுழியோடியின் உதவியை வழங்குமாறு நீர்ப்பாசனத் துறையின் கோரிக்கைக்கு கடற்படை உடனடியாக பதிலளித்ததுடன், இதற்காக மேற்கு கடற்படை கட்டளையிலிருந்து ஒரு சுழியோடி குழு அனுப்பப்பட்டது.
அதன்படி, நிலவும் சீரற்ற காலனிலையை எதிர்கொண்டு, போபுருஎல்ல நீர்த்தேக்கத்தின் மதகின் செயல்பாட்டிற்கு இடையூறாக இருந்த மரத் துண்டுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி, அதை செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்க கடற்படை மிகுந்த முயற்சி மேற்கொண்டது.





