மாத்தளை, லக்கலவில் கடற்படையால் நிறுவப்பட்ட 1146 நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் லக்கல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள லக்சிரிபுர கிராமத்தில் நிறுவப்பட்ட (01) நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், கடற்படை 1146 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கியுள்ளதுடன், இவ்வாறு பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு மையம் மூலம், லக்கல பிரதேச செயலகப் பிரிவின் லக்சிரிபுர பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், சுத்தமான குடிநீரை வழங்கும் இந்த சமூக சேவைக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களிக்கும்.