கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கவுடுலுவெவ மஹிந்த மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட ரிவர்ஸ் ஒஸ்மோசிஸ் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று (01) 2025 டிசம்பர் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் சுகாதார அமைச்சின் முயற்சியுடன், பெரேரா அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், கடற்படை 1141 நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்து வைத்துள்ளதுடன், இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கவுடுலுவெவ மஹிந்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும்.
மேலும், சுத்தமான குடிநீரை வழங்கும் இந்த சமூக சேவைக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களிக்கும்.


