கடற்படைத் தளபதி INS UDAYAGIRI உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
சர்வதேச கடற்படைக் கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்காக இன்று (2025 நவம்பர் 27,) தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் INS UDAYAGIRI கப்பலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
INS UDAYAGIRI கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் Vikas Sood இருப்பதுடன், மேலும் 2020 - 2023 வரை இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
அங்கு, கெப்டன் Vikas Sood இலங்கை கடற்படைத் தளபதியினால் INS UDAYAGIRI கப்பலிற்கு கடற்படை மரபுகளின்படி அன்புடன் வரவேற்ற பிறகு, கடற்படைத் தளபதி கப்பலில் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடல்சார் பாதுகாப்பிற்கான வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்தும் “Sailing Strong Together” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் சர்வதேச கடற்படை கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்றதற்காக கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.


