சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு 2025 இல் பங்கேற்க வெளிநாட்டு போர்க்கப்பல்கள் தீவுக்கு வருகின்றன
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு (07) போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், 2025 நவம்பர் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறும் சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 2025 நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தீவை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றது.
தீவை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான ‘PROTTOY’ 90.1 மீட்டர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக CAPTAIN MD TOUHIDUL HAQUE BHUIYAN, கடமையாற்றுகின்றார்.
சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பு - 2025 இல் இரண்டு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றது. அதன்படி, தீவை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT, 262.5 மீட்டர் நீளம் கொண்டது அதன் கட்டளை அதிகாரியாக captain Ashok Rao கடமையாற்றுகின்றதுடன், அத்துடன் INS UDAYAGIRI போர்க்கப்பல், 149.2 மீட்டர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக captain Vikas Sood கடமையாற்றுகின்றார்.
மேலும், சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பு 2025 உடன் இணைந்து, கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த போர்க்கப்பல்களின் குழுவினர்களில் பங்கேற்புடன் 2025 நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம், விளையாட்டு திட்டம், சர்வதேச உணவு கண்காட்சி, சர்வதேச இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் நகர அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளன.


