உயிர்நீத்த ஆயுதப்படை வீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு கடற்படையின் பங்களிப்பு

முதலாம் உலகப் போருக்குப் பிறகு தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் உன்னத அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நினைவு தினம், 2025 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் இவ் நினைவேந்தல் நிகழ்வினை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் தொடங்கப்பட்ட இந்த நினைவு தினம் (Remembrance Day), தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆயுதப் படைகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் உன்னத அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும் தற்போது இது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு கடற்படைத் பிரதி தலைமை அதிகாரி தலைமை தாங்கியதுடன், அதே நேரத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, வடமத்திய, தென்கிழக்கு, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படைக் கட்டளைகளில் நடைபெற்ற நினைவுகூரும் நிகழ்வு கட்டளைத் தளபதிகளின் தலைமையிலும், குறித்த கட்டளைகளுக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கடற்படை வீரர்களின் பங்கேற்புடனும் நடைபெற்றன.