நிகழ்வு-செய்தி
கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வு - 2025 ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது
புத்தளம், கங்கேவாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற மூன்று (03) நாள் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வானது, கூட்டு நடைமுறைப் பயிற்சிகளைத் தொடர்ந்து 2025 நவம்பர் 14 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
15 Nov 2025
கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது
கடல் சூழலில் நிலையான மீன்வளம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான கூட்டு அணுகுமுறைக்காக; வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியில், 2025 நவம்பர் 11 ஆம் திகதி வடமேற்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்கள், மீன்வள மற்றும் நீர்வளத் துறை, இலங்கை பொலிஸ் துறை, சுங்கத் துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை, மத்திய சுற்றுச்சூழல் ஆணையம், வனப் பாதுகாப்புத் துறை மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், குறிப்பிட்ட பொருள் சார்ந்த யோசனைகள், திட்டங்கள் குறித்த அமர்வு நடைபெற்றது.
15 Nov 2025


