இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடற்படை மரபுகள் மற்றும் சர்வ மத மரபுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுகூடல் இன்று (2025 நவம்பர் 07) வெலிசரவில் உள்ள ‘Wave N’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.