நிகழ்வு-செய்தி
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் கலேவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள க/ மெதபெத்த மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 அக்டோபர் 31 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
04 Nov 2025
கடற்படைத் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 04வது பாடநெறிக்காக வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நான்காவது (04) தேசிய பாதுகாப்பு பாடநெறியில் பயிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ‘Role of Sri Lanka Navy in National Security’ என்ற தலைப்பில் 2025 நவம்பர் 03 ஆம் திகதி வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார். மேலும், அந்த சந்தர்ப்பத்தில், கடற்படைத் தளபதியை கௌரவிக்கும் வகையில் ‘Hall of Fame’ இல் கடற்படைத் தளபதியின் பெயரும் சேர்க்கப்பட்டது.
04 Nov 2025
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி குழுவின் தலைவர் கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலரை அணிவித்தார்
வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட பாப்பி மலர் நினைவேந்தலுடன் இணைந்து, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி மலர் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு), இன்று (2025 நவம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பாப்பி மலரை அணிவித்தார்.
04 Nov 2025


