நிகழ்வு-செய்தி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்ப்பது குறித்து மீனவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு பாநெறி

நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, உஸ்வெட்டகெய்யாவ, இலங்கை கடற்படைக் கப்பலான கெளனியில், 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று அப்பகுதியில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

21 Sep 2025

2024 கொள்முதல் வழிகாட்டுதல்கள் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது

கடற்படையின் மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான கொள்முதல் வழிகாட்டி 2024 (Procurement Guideline 2024) மற்றும் ஏல செயல்முறை குறித்த விழிப்புணர்வு திட்டம், 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பிரிவின் தலைமை கணக்காளர் திரு. ஜிஎஸ்கே சமரதுங்கவின் வளங்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

21 Sep 2025

புதிய MASTER CHIEF PETTY OFFICER OF NAVY அதிகாரியாக MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்க நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய (MASTER CHIEF PETTY OFFICER OF NAVY - MCPON) ஆக MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்க 2025 செப்டம்பர் 18, அன்று நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்கவுக்கு அவ் பதவிக்கு உரித்தான கை கவசம் மற்றும் கோலை வழங்கி கடற்படைத் தலைமையகத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

21 Sep 2025

அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக காரியாலத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Lieutenant Colonel Matthew House,உட்பட இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த இராஜதந்திர அதிகாரிகள், 2025 செப்டம்பர் 15, அன்று திருகோணமலையில் உள்ள கடற்படை சிறப்பு கைவினைப் படை தலைமையகத்தில் உள்ள பயிற்சிப் பாடசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

21 Sep 2025