நிகழ்வு-செய்தி
கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில நியமிக்கப்பட்டார்
இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில 2025 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் கடற்படைத் தலைமையகத்தில், ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலவிடம் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கி, 2025 செப்டெம்பர் 19 ஆம் திகதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
19 Sep 2025
கடற்படைத் தளபதியின் தலைமையில் நடைபெற்ற ‘Junior Officer’s Conclave – 2025’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படைத் தளபதிக்கும் கடற்படை ஏவுகனை கட்டளையின் கனிஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியான ‘Junior Officer’s Conclave – 2025’ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 செப்டம்பர் 12 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
19 Sep 2025


