கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை இன்று (2025 ஜூலை 09) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இராணுவ மரபுகளின்படி நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திபிற்காக விமானப்படை தலைமையகத்திற்குள் நுழைந்த கடற்படைத் தளபதிக்கு, விமானப்படையின் மிக உயர்ந்த இராணுவ மரியாதையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும், சகோதரப் படைகளுக்கு இடையேயான பிணைப்பு மற்றும் சேவை ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.