கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாலிகாத்தென்ன கல்லூரியில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களுக்காக கையளிக்கப்படும் நிகழ்வானது, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் மற்றும் கம்மெந்த சமூக சேவை திட்டத்தின் கீழ், பொரளையைச் சேர்ந்த எம்.பி. அமரசிங்கவின் நிதி பங்களிப்புடன், 2025 ஜூன் 20 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படையினால் 1106 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டதுடன், இந்த நிலையத்தினால் மாளிகாத்தென்ன பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.