தேசிய நீரியல் தினம் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் உலக நீரியல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

ஜூன் 21 ஆம் திகதி உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நீரியல் அலுவலக சமூகத்தினருடன் இணைந்து இன்று (2025 ஜூன் 24) வெலிசரவில் உள்ள Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலைவர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் உலக நீரியல் தினத்தைக் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கடல் வளங்களின் நிலையான பயன்பாடு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரியல் முக்கியத்துவம் மற்றும் வழிசெலுத்தலில் அதன் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள நீரியல் வல்லுநர்களின் தொழில்முறை பங்களிப்பை எடுத்துரைக்கவும், பல்வேறு கடல் நடவடிக்கைகளுக்கு துல்லியமான நீரியல் தரவுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காகவும், சர்வதேச நீரியல் அமைப்பால் (IHO) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலக நீரியல் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைப்பு சார்ந்த கருப்பொருள்களின்படி 2006 முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலக நீரியல் தினத்தின் கருப்பொருள், இந்த ஆண்டு (2025) (Seabed Mapping: Enabling Ocean Action) என்பதாகும்.

அதன்படி, உலக நீரியல் தின கொண்டாட்டத்தில் தேசிய நீரியல் வல்லுநர் மற்றும் கடற்படை நீரியல் தலைவரால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது, 2023 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கை நீரியல் அலுவலகத்தின் சாதனைகள் மற்றும் படிப்படியான வளர்ச்சியை எடுத்துரைத்தார். பின்னர், கௌரவ பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) கூட்டத்தில் உரையாற்றினார், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான வழிசெலுத்தலில் நீரியல் சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இலங்கை நீரியல் சேவையின் வளர்ச்சி மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பான வழிசெலுத்தல் மற்றும் பிற கடல்சார் நடவடிக்கைகளை உறுதி செய்வதில் அதன் பங்கு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க (ஓய்வு) அவர்களால், துறைமுக மேம்பாட்டில், கடல்சார் இடஞ்சார்ந்த திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் மயமாக்களின் தாக்கத்தை நிர்வகித்தல் ஆகியவற்றில் பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையை இணைப்பதில் நீரியல் சேவை தனித்துவமான பங்கை வகிக்கிறது என்று கூறினார்.

மேலும், தேசிய நீரியல் கவுன்சிலின் தலைவர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி (ஓய்வு) விழாக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், ‘Marine Aids to Navigation, IALA’ என்ற தலைப்பில் IALA World – Wide Academy நிறுவனத்தின் திருமதி Gerardine Delanoye அவர்களாலும் ‘Applicability of Seabed 2030 to Island States’ என்ற தலைப்பில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் Vicki Ferrini அவர்களாலும்‘In geopolitical arena, why Sri Lanka is considered as geopolitical hotspot. Is it a myth or reality?’ என்ற தலைப்பில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் திருமதி மனிஷா பாஸ்குவேல் அவர்களால் மற்றும் Role of Hydrography in Delineation of Continental Margin’ என்ற தலைப்பில் ரியர் அட்மிரல் வைஎன் ஜெயரத்ன (ஓய்வு) அவர்களாலும் அறிவார்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.

மேலும், இராஜதந்திர அதிகாரிகள், கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடல்சார் துறையில் அறிஞர்கள் மற்றும் பங்குதாரர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், பயிற்சி வணிக கடற்படை அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் இந்த உலக நீரியல் தின நிகழ்வில் பங்கேற்றனர்.