கதிர்காம பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான கடற்படையின் சமூக பணி
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் வரையிலான வருடாந்திர பாத யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான வழியில் தேவையான வசதிகளை வழங்கும் பணியானது இலங்கை கடற்படைனால் 2025 ஜூன் 20 அன்று ஆரம்பமானதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணித்து பாத யாத்திதரையில் கலந்துக்கொண்ட கடற்படைத் தளபதி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சேவைகளை தொடர்ந்து வழங்க கடற்படைத் தளபதி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதன்படி,தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ், குமண தேசிய பூங்காவின் நுழைவு வாயிலிலிருந்து கும்புக்கன் ஓயா வரையிலான வழியில் யாத்ரீகர்களுக்கு மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட சமூக ஆதரவை வழங்க அப்பகுதியில் உள்ள பிற அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டதுடன் கும்புக்கன் ஓயாவில் இருந்து கதிர்காமம் வரை இந்த சமூக சேவையினை வழங்கும் திட்டமானது தெற்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் நடைப்பெற்றது.
மேலும், 2025 ஜூலை 04 ஆம் திகதி வரை நடைபெறும் பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, தெற்கு கடற்படை கட்டளையினாலும் தென்கிழக்கு கடற்படை கட்டளையினாலும் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்ற அனைத்து தரப்பினருடனும் இணைந்து சமூக விருந்தோம்பலுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்க கடற்படைத் தளபதி தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.