கடற்படைத் தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 20 முதல் 22 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அங்கு கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்த்துடன் அந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார். மேலும், கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கடற்படையின் பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து விளக்கினார்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா அவர்களால் தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதியை வரவேற்கப்பட்டதன் பின்னர், இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிறுவனத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுடன் உரையாற்றிய தளபதி, கடற்படையின் பணி மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து அக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களுக்கு விளக்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு தென்கிழக்கு கடற்படை கட்டளை வழியாக பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடற்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்து கடற்படையினருக்கு விளக்கினார், மேலும் அந்தக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்ற தேவையான வழிமுறைகளை வழங்கினார். மேலும் உரையாற்றிய கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படை தேசிய பாதுகாப்பில் முதன்மையான பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும், முறையான வழிமுறையின்படி அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவது, முறையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவது, உள்ளூர் நீர்நிலைகள் உட்பட கடல் வலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது மற்றும் நிலையான கடல் வலயத்தை வளர்ப்பதற்கான தேசிய கடல்சார் அபிலாஷையை அடைவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். ஆட்சியைப் பாதுகாக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதும், அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதும் அவசியம் என்று கடற்படைத் தளபதி கூறினார். உயர்ந்த ஒழுக்கம் மற்றும் நல்ல நடத்தை எப்போதும் பேணப்பட வேண்டும் என்றும், இதற்காக அனுபவம் வாய்ந்த மற்றும் சிரேஷ்ட மாலுமிகள் முதல் கனிஷ்ட மாலுமிகள் வரை தொடர்ந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது அவசியம் என்றும், இதன் மூலம் மக்களுக்கு உயர்தர சேவையை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல நாட்டை வழங்குவதும் அவசியம் என்றும் அவர் கூறினார். நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதோடு, கடற்படையால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ள புதிய அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதன் மூலம் பாதுகாப்பான நாட்டை உருவாக்க ஒவ்வொரு கடற்படை வீரரிடமிருந்தும் கடற்படை உறுதியான அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறது என்றும் கடற்படைத் தளபதி மேலும் வலியுறுத்தினார்.

இந்த விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி இலங்கை கடற்படைக் கப்பல்களான மஹாநாக மற்றும் திகாயு நிறுவனம் மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான கடற்படைப் பிரிவுகளின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்தார். கடற்படையின் செயல்பாட்டு நோக்கத்திற்கு ஏற்ப விரும்பிய செயல்பாட்டுத் தயார்நிலையை தொடர்ந்து பராமரிப்பதையும், நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.