கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் தபுத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெல்ஹிரியாவ மற்றும் கோன் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

இந்த 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன், கடற்படையினால் 1105 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டதுடன்; இந்த 02 நிலையங்களும் தெல்ஹிரியாவ மற்றும் கோன் வாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.