கடலில் எண்ணெய் கசிவை நிர்வகிப்பது குறித்த கூட்டுப் பயிற்சி காங்கேசன்துறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் வலயத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக பதிலளிப்புக்கான தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் கடல் வலயத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஏற்பாடு செய்த கூட்டுப் பயிற்சி, 2025 ஜூன் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் காங்கேசன்துறை துறைமுகத்தின் 'PH' இறங்குத்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, தேசிய எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்கள் தற்செயல் திட்டத்தின் (NOHSCP) கீழ் கடல் மாசுபாடு சம்பவங்களை நிர்வகிப்பதில் முதல் பதிலளிப்பவராக செயல்படும் இலங்கை கடலோர காவல்படை நடத்திய இந்தப் பயிற்சி, செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும், இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவு பேரழிவுகளுக்கு உடனடியாக பதிலளிக்க தயாராக இருப்பதை மேம்படுத்த செயன்முறைகள் மூலம் தேவையான விளக்கம் வழங்கப்பட்டது.

கடல் சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் எண்ணெய் கசிவினை எதிர்கொள்ள தேவையான தத்துவார்த்த அறிவு வழங்கப்பட்டது, மேலும் எண்ணெய் கசிவு செயல்விளக்கம் மூலம் நடைமுறையில் பதிலளிப்பது, உபகரணங்களை கையாளுதல் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான சரியான தொடர்புகளை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.