கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்

அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 11 முதல் 18 வரை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் கஞ்சதேவ மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் கோதைம்பரவில் இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மருத்துவ ஊழியர்களின் வளங்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டம், கடலில் அவசரநிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலையை எவ்வாறு நிர்வகிப்பது, தொற்றாத மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பது, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, மன நல்வாழ்வு மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து மீனவ சமூகத்திற்குக் விழிப்புணர்வூட்டப்பட்டது.