இலங்கை கடற்படைத் தளபதி இந்தோ-பசிபிக் கடல்சார் பாதுகாப்பு குறித்து 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்
அமெரிக்க கடற்படையின் பசிபிக் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி அட்மிரல் ST Koehler நடத்திய 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாடு (12th Multilateral Maritime Virtual Key Leadership Engagement) 2025 ஜூன் 18 அன்று ஹவாயிலிருந்து நிகழ்நிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்திலிருந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மாநாட்டில் பங்கேற்றார்.
அதன்படி, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், புருனாய், கனடா, சிலி, பிஜி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பபுவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், கொரிய குடியரசு, சிங்கப்பூர், தாய்லாந்து, டோங்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பத்தொன்பது (19) நாடுகளின் கடற்படைத் தலைவர்கள் இந்த பன்முக கடல்சார் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்றனர்.
மேலும், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு நோக்கங்களை அடைய புதிய மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற கடற்படைத் தளபதி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கான இலங்கை கடற்படையின் தொலைநோக்குப் பார்வை தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.