உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு கடற்படையின் சமூக பங்களிப்பு.

'முழுநிறைவான வாழ்க்கை - வசதியான நாடு' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல் மற்றும் கடலோர வலயத்தின் நிலையான இருப்புக்கு உறுதியளித்துள்ள கடற்படை, 'நிலைபேறான உயிர்சார் உலகம் – என்னும் பசுமையான வாழ்க்கை' என்ற கருத்தை யதார்த்தமாக்குவதற்காக, ஜூன் 05 உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு 2025 ஜூன் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடற்படையானது சமூக சேவையையில் ஈடுபட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பரகும்பா நிறுவனத்தினால் திருகோணமலை பிரதேச செயலகம், மூதூர் மற்றும் சாம்பூர் பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மூதூர் சுதைகுடா பகுதியில் தென்னை கன்றுகள் நடப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளையின் காங்கேசன்துறையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவன வளாகத்தில் மருத்துவ தாவரங்கள் லிங்க் நேச்சுரல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நடப்பட்டதுடன், அதே நேரத்தில் வடக்கில் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு, காரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்துறை, மடகல் மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகள் மற்றும் நிலப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னை மற்றும் முந்திரி மரங்களை நடுதல் இலங்கை கடற்படை கப்பல்களான வேலுசுமண, எலார, கோதைம்பர, காஞ்சதேவ, அக்போ மற்றும் வசபா ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அறுகம்மே விரிகுடா கடற்கரையின் அழகையும் கவர்ச்சியையும் மீட்டெடுத்து, கடற்கரையில் சிதறிக்கிடக்கும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அகற்றுவதற்கு, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்களான மகாநாக மற்றும் தீகாயு நிறுவனங்களால், அறுகம்மே விரிகுடா பொலிஸ் அதிரடிப் படையினர் , கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கடலோர பாதுகாப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.