கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹேஹெட்டுவாகம, அமுனுகலை, அடம்பனை மற்றும் கட்டுபத் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட நான்கு (04) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

இந்த 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன், கடற்படையினால் 1103 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டதுடன்; இந்த 04 நிலையங்களும் ஹேஹெட்டுவாகம, அமுனுகலை, அடம்பனை மற்றும் கட்டுபத் வாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும் நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்' என்ற அரச சுகாதார தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் இந்த சமூகப் பராமரிப்புத் திட்டம் இலங்கை கடற்படையின் பிரிசோதனை மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.