உலக சமுத்திர தின தேசிய திட்டம் கொழும்பு துறைமுக நகரத்தில்

ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரும் உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு, சமுத்திரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்திற்காக சமுத்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம் கொழும்பு துறைமுக நகரில் இன்று (2025 ஜூன் 08) நடைபெற்றது.

சமுத்திரம் என்பது உயிர்கள் தோன்றிய, உயிர்களின் உயிர்வாழ்வை தீர்மானிக்கப்படுகின்ற ஒரு தனித்துவமான இடமாக இருப்பதால், சமுத்திரம் பல்லுயிர் பெருக்கத்தில் மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் திகதியை உலக சமுத்திர தினமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டின் கருப்பொருள் "Wonder: Sustaining what Sustains us" என்பது ஆகும்.

அதன்படி, 'எம்மை பாதுகாக்கும் அற்புதமான சமுத்திரத்தை பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உலக சமுத்திர தின தேசிய நிகழ்ச்சியினால் ஒரு தீவு நாடாக சமுத்திர வளங்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் சர்வதேச பிணைப்பு, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கடல் மாசுபாட்டைத் தடுப்பதன் மூலம், இலங்கையின் நிலப்பரப்பை விட எட்டு மடங்கு பெரிய இலங்கையின் சமுத்திர வலயத்தின் வளங்களை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் சட்டவிரோத, புகாரளிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் குறித்தும் எடுத்துக்காட்டப்பட்டது.

குறிப்பாக பிளாஸ்டிக் பொலிதீன் உள்ளிட்ட தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படும் மக்காத கழிவுகள் மற்றும் மனிதர்களால் பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் திடக்கழிவுகள் கவனக்குறைவாக அகற்றப்படுவதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் வழியாக சமுத்திரத்தில் கலக்கின்றன. இதன் விளைவாக, நுண்ணிய பிளாஸ்டிக்குகள் உணவுச் சங்கிலி வழியாக மனித உடலுக்குள் நுழைந்து நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் காரணியாகின்றது.

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற உலக சமுத்திர தின தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்காக, இலங்கை கடற்படை கடலின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் பரந்த அளவிலான செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் கடற்படையின் செயல்பாட்டு இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும், 'முழு நிறைவான வாழ்க்கை - வசதியான நாடு' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல் மற்றும் கடலோர வலயத்தின் நிலையான இருப்புக்கு உறுதிபூண்டுள்ள கடற்படை, 'நிலைபேறான உயிர்சார் உலகம் - என்னும் பசுமையான வாழ்க்கை' என்ற கருத்தை யதார்த்தமாக்குவதற்காக, கடல் சூழலின் பல்லுயிரியலைப் பாதுகாக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவையை வழங்குவதற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.