திருகோணமலை புறா தீவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் கட்டமைப்பை சுத்தம் செய்வதற்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
திருகோணமலை புறாத் தீவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் கட்டமைப்பின் பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் விளைவிக்கும் மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உள்ளிட்ட குப்பைகளை பவளப்பாறைகளிலிருந்து அகற்றும் திட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், 2025 ஜூன் 02, அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், கடற்படை சுழியோடிகளினால் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இந்தக் கருப்பொருளை நனவாக்கும் வகையில், இலங்கை கடற்படையானது கடலோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.
அதன்படி, புறா தீவைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக, “க்லீன் ஶ்ரீ லங்கா” செயளாளர் காரியாலயத்தினால், அரசு சாரா கட்சிகளின் பங்கேற்புடன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம், புறா தீவைச் சுற்றியுள்ள பவள சுற்றுச்சூழல் கட்டமைப்பை வெற்றிகரமாக சுத்தம் செய்து, அதில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றியது.
மேலும், “க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் பவளப்பாறை சூழலை சுத்தம் செய்வதற்கு கடற்படையின் சமூக தன்னார்வலர்கள் பங்களித்த முதல் சந்தர்ப்பமும் இதுவேயாகும்.