கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தான திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றொரு சமூக சேவை முயற்சியான இரத்த தான நிகழ்ச்சி 2025 மே 30 அன்று கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
அதன்படி, தேசிய போர்வீரர் நினைவு தினத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், ராகம, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் ஒருங்கிணைந்து இந்த இரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் ஏராளமான கடற்படை வீரர்கள் தன்னார்வத் தொண்டு செய்து இந்த உன்னத சமூக சேவையை வெற்றிகரமாக்க பங்களித்தனர்.