07வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட‘விநியோக மாநாடு-2025’ விநியோகச் சங்கிலியின் புதிய சாத்தியக் கூறுகளில் திறன்களை மேம்படுத்தும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறி எண் 09 இனால் ஏற்பாடு செய்யப்பட்ட 07வது 'விநியோக மாநாடு' -2025’, ‘Leveraging Adaptive Logistics in Building Resilient Supply Chains in a Volatile Global Economy’ "நாட்டிற்கான கடற்படையின் பணி" என்ற கருப்பொருளின் கீழ், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் 2025 மே 31 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு மாநாட்டின் முக்கிய உரையை களனி பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் திரு. ரவி திசாநாயக்க நிகழ்த்தினார். இந்நிகழ்வில் முக்கிய உரை, ஏழு (07) ஆராய்ச்சிக் கட்டுரைகளின் சமர்ப்பிப்பு, அத்துடன் அறிவார்ந்த மற்றும் பகுப்பாய்வுக் கருத்துகள் ஆகியவை இடம்பெற்றதுடன், அதன்படி, மாநாடு மூன்று துணை கருப்பொருள்களின் கீழ் நடைபெற்றது, அவை பின்வருமாறு: Digital Transformation in Supply Chains: Leveraging Technology for Agility and Efficiency, Risk Management and Crisis Response: Building Resilience to Global and Local Market Fluctuations, Sustainable Logistics Practices: Incorporating Environmental Responsibility into Supply Chains பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள், கடற்படை தலைமையகத்தின் இயக்குநர் ஜெனரல்கள், விநியோகப் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் இராணுவம் மற்றும் விமானப்படை சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, விநியோகப் செயல்முறை ஒரு முக்கியமான மூலோபாய முன்னுரிமை என்றும், எந்தவொரு கடற்படை நடவடிக்கையின் கட்டமைப்பிற்கும் விநியோகப் செயல்முறை ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது என்றும் கூறினார். விநியோகப் செயல்முறை; புதுமை, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் குறிப்பாக பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் வளர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று மேலும் வலியுறுத்தப்பட்டது.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், அகாடமி ஊழியர்களின் ஆதரவுடன், 9நீடிக்கப்பட்ட விநியோக மேலாண்மை பாடநெறியின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார (ஓய்வு), விநியோகங்கள் மற்றும் சேவைகள் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில, வரவு செலவு திட்டம் மற்றும் நிதி இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் மஞ்சுள திசாநாயக்க, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, இயக்குநர் ஜெனரல் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, பயிற்சி இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, இயக்குநர் ஜெனரல்கள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் ஒவ்வொரு கடற்படை கட்டளையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை விநியோகப் பிரிவின் தலைவர்கள், இராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வெளிநாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சி பெறும் அதிகாரிகள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.