கடற்படையின் பங்களிப்புடன் சுற்றுச்சூழலுக்கு ஒரு நட்பு திட்டம்
2025 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களின் கீழ், கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமானது 2025 மே 29 ஆம் திகதி காலி முகத்திடல் கடற்கரையை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, கடற்படை தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம ஆகியவற்றின் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன், காலி முகத்திடல் கடற்கரையின் அழகையும் கவர்ச்சியையும் மீட்டெடுக்கவும், கடற்கரையில் சிதறிக்கிடக்கும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அப்புறப்படுத்தவும் இந்த கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.