கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இலங்கை கடற்படையில் 33 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மே 30) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையிலான கடற்படை முகாமைத்துவ சபை ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து வாழ்த்துகளை தெரிவித்த பின்னர், கடற்படை மரபுப்படி அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சக அதிகாரிகளிடம் பிரியாவிடை பெற்று கடற்படை தலைமையகத்திலிருந்து கடற்படை வாகன அணிவகுப்பில் புறப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்கவிற்கு சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர் கடற்படை மரபுப்படி மரியாதை செலுத்தினர்.
1991 ஆம் ஆண்டு 21வது கெடட் படைப்பிரிவில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, தனது 33 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில் கடற்படையின் விரைவுத் தாக்குதல் ரோந்து கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும், 4வது விரைவுத் தாக்குதல் கப்பல் குழுவின் கட்டளை அதிகாரி, துணை இயக்குநர் கடற்படை பணியாளர், இயக்குநர் கடற்படை உத்தி மற்றும் திட்டமிடல், தெற்கு கடற்படைப் பகுதித் தளபதி, மேற்கு கடற்படைப் பகுதித் தளபதி, தன்னார்வ கடற்படைத் தளபதி, கிழக்கு கடற்படைப் பகுதித் தளபதி மற்றும் கடற்படைப் பணியாளர்களின் துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்த இலங்கை கடற்படையின் அதிகாரி ஆவார்.