கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா பொறுப்பேற்றுள்ளார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா அவர்கள் இன்று) 2025 மே 28 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.