கடற்படையின் இரத்த தானத்திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 மே 20 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபயாவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
அதன்படி, கடற்படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த இரத்த தானத் திட்டம், தேசிய போர் வீரர்களின் நினைவு நாள் மற்றும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அனுராதபுரம் போதனா மருத்துவமனை மற்றும் வவுனியா மாவட்ட மருத்துவமனையின் இரத்த வங்கிகளுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் தன்னார்வத் தொண்டு செய்து இந்த உன்னத சமூக நோக்கத்தை வெற்றிபெறச் செய்தனர்.