கடற்படைத் தளபதி திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி, திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, 2025 மே 18 அன்று படைப்பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர்களுடன் உரையாடி, கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழிமுறைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
அதன்படி, கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சிறப்பு படகுப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதியை, சிறப்பு படகுப் படையின் கட்டளைத் தளபதி தலைமையகத்திற்கு வரவேற்றார், பின்னர் கடற்படைத் தளபதி அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கடற்படைத் தளபதி, தேசிய பாதுகாப்புக்காக கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் சிறப்பு படகுப் படைப்பிரிவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கூறினார். கடற்படைத் தளபதி மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், சிறப்பு படகுப் படை அதன் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் திறன்களை மிக உயர்ந்த மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடற்படை எதிர்பார்க்கிறது என்றும், இந்த நோக்கத்திற்காகத் தேவையான தொடர்ச்சியான பயிற்சி, புதிய அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு ஒவ்வொரு கடற்படை வீரரின் அர்ப்பணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி சிறப்பு படகுப் படைத் தலைமையகத்தில் சமச்சீரற்ற போர் தந்திரோபாய பாடநெறியைப் பயிலும் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் சுமுகமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டார், சிறப்பு படகுப் படைத் தலைமையகத்தில் உள்ள நலன்புரி வசதிகளை ஆய்வு செய்து வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார்.