இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் கர்னல் Avihay Zafrany, இன்று (2025 மே 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.