உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு கடற்படையினால் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் சுகாதார அமைச்சகத்திடம் கையளிக்கப்பட்டன
மே 8 ஆம் திகதி உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள், 2025 மே 16 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியின் தலைமையில், நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக சுகாதார அமைச்சகத்திற்கு கையளிக்கப்பட்டன.
தலசீமியா நோயாளிகளுக்கு தொடர்ச்சியான இரத்தமாற்றம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் அத்தகைய இரத்தமாற்றத்தின் போது உடலில் சேரும் அதிகப்படியான இரும்பை அகற்றி மருந்துகளை உட்செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்படி, சந்தையில் அதிக விலையில் விற்கப்படும் தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகளை மிகக் குறைந்த விலையிலும், தேவையான தரநிலைகளுடனும், தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் நோக்கத்துடன், தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகளை உற்பத்தி செய்யும் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஒரு சமூக திட்டமாக கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் கடற்படை சமூக பொறுப்புணர்வு நிதியின் நிதி பங்களிப்புடன் தொடங்கப்பட்டது.
அத்துடன், 2025 மே 16 சுகாதார அமைச்சகத்திடம் கையளிக்கப்பட்ட 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகளுடன், கடற்படையானது இதுவரையில் தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் 3564 தொகையானது நோயாளிகளுக்கு விநியோகிப்பதற்காக சுகாதார அமைச்சகத்திற்கு கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும்,கடற்படை தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்த சமூகப் பணியில் ஈடுபட்டு வருவதால், இத்தகைய அமைப்புகளை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகையை நாட்டிற்கு மிச்சப்படுத்துவதற்கும் கடற்படை பங்களிக்கிறது.