அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களை கண்டறியும் உபகரணங்கள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்குத் தேவையான அணு மற்றும் கதிரியக்கப் பொருள் கண்டறிதல் உபகரணங்களை கடற்படைத் தளபதியிடம் ஒப்படைத்தல் இன்று (2025 மே 15) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படைக்கும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் (National Nuclear Security Administration - NNSA) இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அணு மற்றும் கதிரியக்க பொருள் கண்டறிதல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும், இலங்கை கடற்படையின் இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவுகளால் முக்கிய துறைமுகங்கள் மற்றும் கடல் எல்லைகளில் ஆய்வுகளை மிக திறமையாகவும் திறம்படவும் மேற்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், கடல்சார் கள விழிப்புணர்வுக்கான கூட்டு அணுகுமுறையையும் குறிக்கும் வகையில், உபகரணங்கள் ஒப்படைப்பு விழாவில், NNSA இன் சிரேஷ்ட ஆலோசகர் திரு. மைக்கேல் கானர்(Mr. Michael Connor, Senior Advisor at the NNSA) , இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையின் இயக்குநர் ஜெனரல் பொறியாளர் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.