கொழும்பில் ஆரம்பித்த கூட்டு சர்வதேச மாநாட்டில் கடற்படைத் தளபதி சிறப்புரையை நிகழ்த்தினார்

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (Institute of National Security Studies - INSS), Consortium of South Asian Think Tanks (COSATT) மற்றும் Konrad-Adenauer-Stiftung (KAS) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு சர்வதேச மாநாடு இன்று (2025 மே 15) கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த மாநாட்டின் சிறப்புரையை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் நிகழ்த்தினார்.

‘MARITIME SECURITY OF SMALL, MIDDLE AND ISLAND NATIONS: BETWEEN COMPETITION, COOPERATION AND CO-EXISTENCE’ என்ற கருப்பொருளின் கீழ், 2025 மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன். கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி மற்றும் இராணுவப் படையின் பிரதிப் பிரதானி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அதன்படி, இந்த மாநாட்டில் சிறப்புரையை ஆற்றிய கடற்படைத் தளபதி, சிறிய, நடுத்தர மற்றும் தீவு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பைக் கையாளும் போது போட்டித்தன்மையுடனும், ஒத்துழைப்புடனும், இணக்கமாகவும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், இந்த சர்வதேச மாநாட்டிற்கு; இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஜெர்மனி மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திர பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிபுணத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.