‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் பொத்துவில் பகுதியில் சதுப்புநிலத் தோட்டத் திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு

‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் கடற்படை ரோட்டராக்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Rotaract Informatics Institute of Technology -RIIT) இணைந்து பொத்துவில் யூராணி குளம் பகுதியில் 1000 சதுப்புநில மரக்கன்றுகளை நடும் திட்டத்தை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சதுப்புநில மர நடுகைத் திட்டம், கடலோர அரிப்பைத் தடுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்கும் மற்றும் காலநிலை மாற்றத்தால் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.