க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு
க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 ஏப்ரல் மாதம் 19 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெற்கு பிராந்தியத்தில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு கடற்படை முழுமையாகப் தனது பங்களிப்பை வழங்கியது.
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் பிரதான பங்காளியாக, இலங்கை கடற்படை தீவின் அனைத்து கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு பங்களித்து வருகிறது. அதன்படி 2025 ஏப்ரல் மாதம் 19 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், காலி கோட்டை மற்றும் ஹம்பாந்தோட்டை நகர கடற்கரை பூங்காவில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படை தனது முழு பங்களிப்பை வழங்கியது.
இதன்படி, இத்திட்டத்தின் மூலம் கடற்கரையில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக், பொலித்தீன், திண்மக் கழிவுகள் உள்ளிட்ட பெருந்தொகையான குப்பைகளை சேகரித்து கடற்கரையில் இருந்து அகற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.