கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (2025 ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer Helicopter வகைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற போர் கப்பலானது 149.5 மீற்றர் நீளமும், மொத்தம் 262 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் Kuon Yong Gu பணியாற்றுகிறார்.

மேலும், இந்த போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் ‘KANG GAM CHAN’ கப்பல் 2025 ஏப்ரல் 24 ஆம் திகதி அன்று கப்பலானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.