சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விழாவானது 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி தலைமன்னார், பியர்கம ரோமன் கத்தோலிக்க கல்லூரி மைதானத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நாட்டுப்புற விளையாட்டுகளுடன் நடைபெற்ற இந்த பக்மஹா விழாவில், வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் பிரதேச வாசிகளும் பங்கேற்றனர்.

மேலும், பக்மஹா விழாவுடன் இணைந்து, வட மத்திய கடற்படை கட்டளையால் பொதுமக்கள் சமூகத்திற்காக ஒரு வெளிப்புற அமைப்பின் ஆதரவுடன் இலவச கண் சிகிச்சையும் ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் பக்மஹா விழா ஒரு வண்ணமயமான இரவு இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.