வடக்கு கடற்படை கட்டளையினர் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடாத்தினர்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வடக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் பிரதி தளபதி தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய புத்தாண்டு சடங்குகள், நாட்டுப்புற விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த பக்மஹா விழாவில் வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.