வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்றுக் கொண்டார்
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஜகத் குமார 2025 டிசம்பர் 31 வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
கடற்படையின் மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ஜகத் குமாரவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.
மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க, கடற்படை மரபுப்படி வடக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.