இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் Faheem-Ul-Aziz (ஓய்வு) இன்று (2025 மார்ச் 11) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரால், 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இந்த நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மட் பாரூக்கும் (Colonel Muhammad Farooq) கலந்துகொண்டதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.