ரியர் அட்மிரல் துஷார உடுகம கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் துஷார உடுகம இலங்கை கடற்படையில் 33 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மார்ச் 07) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட தலைமையிலான கடற்படை முகாமைத்துவ சபை ரியர் அட்மிரல் துஷார உடுகமவின் 55வது பிறந்தநாளை இன்று கடற்படைத் தலைமையகத்தில் வைத்து வாழ்த்திய பின்னர், கடற்படை மரபுப்படி அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சக அதிகாரிகளிடம் பிரியாவிடை பெற்று கடற்படை தலைமையகத்திலிருந்து கடற்படை வாகன அணிவகுப்பில் புறப்பட்ட ரியர் அட்மிரல் துஷார உடுகமவிற்கு சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர் கடற்படை மரபுப்படி மரியாதை செலுத்தினர்.

1991 ஆம் ஆண்டு 09 ஆவது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் துஷார உடுகம, தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையில் கடற்படையின் விரைவுத் தாக்குதல் ரோந்துக் படகுகளின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கட்டளை நடவடிக்கை அதிகாரி (வடமேற்கு), துணை இயக்குனர் (பணியாளர் மற்றும் நிர்வாகம்), இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் ஒருங்கிணைப்பு (கடற்படை), பணிப்பாளர் கடற்படை நிர்வாகம், பணிப்பாளர் பொது நிர்வாகம், பிரதித் தளபதி வடமேற்கு கடற்படைப் பகுதி, பணிப்பாளர் நாயகம் (கடற்படை மற்றும் விமானச் செயற்பாடுகள்) பாதுகாப்புப் படைத் தளபதி அலுவலகம் போன்ற முக்கிய பதவிகளை வகித்த இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற மூத்த அதிகாரி ஆவார்.