பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS ASLAT’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது
2025 மார்ச் 05 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலான 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (2025 மார்ச் 06) இலங்கை கடற்படை கப்பலான சமுதுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியினை மேற்கொண்டதன் பின்னர் தீவை விட்டு வெளியேறியதுடன், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் பிரியாவிடை அளித்தனர்.
இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதை செலுத்தியதன் பிறகு பயிற்சி முடிவடைந்தது.
இக்கப்பல் தீவில் தங்கியிருந்த காலப்பகுதியில், அதன் கட்டளைத் தளபதி கெப்டன் MUHAMMAD AZHAR AKRAM மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்புகள் இடம்பெற்றதுடன், அதன் பணிக்குழுவினர் கொழும்புப் பிரதேசத்தின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் சுற்றுப்பயணத்தில் இணைந்தனர்.
மேலும், கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சியும் கப்பலில் நடைபெற்றது.