கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் திஸ்ஸமஹாராம ஸ்ரீ தேவானந்த தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்பு மற்றும் பொருயியளாலர் திரு. புத்தி மங்கல அவர்களின் முதலீட்டினால் ஹம்பாந்தோட்டை கல்வி வலயத்தின் திஸ்ஸமஹாராம பிரிவில் உள்ள ஸ்ரீ தேவானந்தா தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட 1084 ஆவது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி 27 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 10000 லீட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் ஸ்ரீ தேவானந்த தேசிய பாடசாலையின் மாணவர்களினது மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களினது சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியுமானதாகும்.