இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா பதவியேற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா இன்று (2025 பெப்ரவரி 13) வெலிசர, தன்னார்வ கடற்படை தலைமையகத்தில், இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.

கடற்படை சம்பிரதாய முறைப்படி தன்னார்வ கடற்படை தலைமையகத்திற்கு ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேராவை வரவேற்றதன் பிறகு, தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய துணை தலைமை அதிகாரி, ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவினால் தன்னார்வ கடற்படைத் தலைமையகத்தில் வைத்து புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

அத்துடன், தன்னார்வ கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க தொண்டர் கடற்படைத் தலைமையகத்திலிருந்து பிரியாவிடை பெற்றார்.