இலங்கையின் இத்தாலிய தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையின் இத்தாலிய தூதுவர் Damiano Francovigh அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (2025 பெப்ரவரி 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கையின் இத்தாலிய தூதுவர் 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தியாவிலுள்ள இத்தாலிய தூதரகத்தில் இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கெப்டன் Fabio CIMA அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறப்பட்டன.