கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கடற்படை கப்பல்துறை வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுடன் கட்டளையின் செயற்பாடுகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை அவதானித்ததுடன், கடற்படை கப்பல்துறை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.