கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் பயிற்சியின் இறுதி உரை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல் விதுர மரைன் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சின் போது துருப்புக்கள் மற்றும் போர்ப் பொருட்களைக் கடலில் இருந்து எதிரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைக்கும் நீர்நிலை நடவடிக்கைகள் (Amphibious Operations) பற்றிய நடைமுறை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இந்தக் களப் பயிற்சிக்காக முதன்முறையாக, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் வங்காளதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்காணிப்பாளர்கள் உட்பட இருபத்தைந்து (25) கடற்படையினர்கள் கலந்துகொண்டனர், அதேவேளை இலங்கை கடற்படையின் சார்பில் கடற்படை ஏவுதல் கட்டளை, மரைன் காலாட்படை பிரிவு, மரைன் படையணி, விரைவு நடவடிக்கைப் படகுப் படை, புலனாய்வுப் பணிப் படை, மற்றும் இலங்கை கடற்படையின் மருத்துவப் பிரிவு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 195 கடற்படை வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். மேலும், இலங்கை கடற்படை கப்பல் சக்தி தரையிறங்கும் கப்பல், கரையோர ரோந்து கப்பல்கள் மற்றும் RHIB கப்பல்கள் உட்பட இலங்கை விமானப்படையின் பெல் 212 மற்றும் MI 17 ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் இணைந்துள்ளது.

Marines Field Training Exercise Blue Whale - 2024 பயிற்சியின் போது எதிரிகளின் எல்லை மற்றும் எதிரிகளின் திறன்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் உளவுப் பயிற்சிகள் (Reconnaissance), தீவுகளைக் கொண்ட கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் (Riverine/ Search and Clear Operations), எதிரியின் எல்லைக்குள் நட்பு படைகளை பாதுகாப்பாக நுழைக்க நிலம் மற்றும் வான்வழி தாக்குதல் பயிற்சிகள் (Amphibious Assault), கடலில் இருந்து படையினர்களை பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக கடலில் இருந்து அடையாளம் காணப்பட்ட எதிரி இலக்குகளைத் தாக்கும் பயிற்சிகள் (Naval Gun Fire Support - NGFS), யுத்தத்தின் போது கூடுதல் படையினர்களை அனுப்புதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் வெளியேற்றுவதற்கான பயிற்சிகள் (Reinforcement and CASEVAC), வானில் இருந்து போர்க்களத்துக்கு படையினர்கள் அனுப்பும் பயிற்சி (Air Infiltration by Rappelling), உள் பாதுகாப்பு கடமைகள் (Internal Security Duties - ISD) மற்றும் எதிர்ப்புரட்சிப் போர்கள் (Counter Revolutionary Warfare - CRW) எதிரிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க தொடர்புடைய போர் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்(Stability Operations) உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த Marines Field Training Exercise Blue Whale - 2024 பயிற்சியின் மூலம்; நீர்நிலை நடவடிக்கைகளின் மூலோபாய உத்திகள் தொடர்பான அறிவைப் புதுப்பித்தல், கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் பிராந்திய பங்குதாரர்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் கூட்டாண்மையை மேம்படுத்துதல், பங்குதாரர்களின் போர் அனுபவத்தைப் பகிர்தல், புதிய அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள், பங்குதாரர்களின் திறன்களை அடையாளம் காணுதல் மற்றும் கடற்படை சிறப்புப் படைகள் மற்றும் மேம்படுத்துதல் பிரிவுகளின் திறன்கள், கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கடற்படை கூட்டாகப் பதிலளிப்பதற்கும், உள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவையான தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்தப்பட்டது.

மேலும், இந்தப் பயிற்சியின் இறுதி விரிவுரை வாய்ப்புக்காக; இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் Mohammad Moniruzzaman, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் Hassan Amir உட்பட பயிற்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு கடற்படை உறுப்பினர்கள், கொடி அதிகாரி கடற்படை வெளியீட்டு கட்டளை கொமடோர் சஞ்சீவ பெரேரா, பணிப்பாளர் மரைன் கொமடோர் ரோஹான் திஸாநாயக்க, கொமடோர் அதிகாரம் விநியோகம் மற்றும் சேவைகள் (கி) கொமடோர் கீர்த்தி ரத்நாயக்க,கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) மற்றும் கட்டளை அதிகாரி இலங்கை கடற்படை கப்பல் விதுர கெப்டன் சஞ்சீவ கொடிகார, விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் கட்டளை அதிகாரி அதுல ஜயவீர, விசேட படகுகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கெப்டன் மதுஷங்க விஜேதுங்க உட்பட மரையின் படையணியின் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் கலந்துகொண்டனர்.